உணர்வு!!!
அப்போது கேட்ட மழை, இப்போது விழுகிறது. ஆனால்! இப்போது அந்த மழையை ரசிக்கும் நிலைப்பாட்டில் மனம் இல்லை. அப்போது கேட்ட சந்தோஷம், இப்போது கண்முன் விரிகிறது. ஆனால்! முழுதாய் கொண்டாட ஆவலில்லை. அப்போது கேட்ட வரங்கள், இப்போது மெல்ல எட்டிப் பார்க்கிறது. ஆயினும்! அப்போதைக்கான துயரம் நீங்கப் போவதில்லை. அப்போது கிடைக்காத தோள்கள், இப்போது வந்து ஒட்டிக் கொள்கிறது. "வராமலே இருந்திருக்கலாம்" என்றுதான் தோன்றுகிறது. அப்போது அழுத கண்ணை, காய்ந்து வரண்ட பின் இப்போது ஒரு கரம் வந்து, ஏந்துவதாகச் சொல்கிறது. "தேவையே இல்லை" அப்போது அந்தக் கண்ணீரின் பெருமானம் வேறு. எல்லாமும் ஒருவேளை பிற்பாடு நடந்தேறலாம்தான். ஆனா! எல்லாவற்றையும் எப்போதுமே ஒரேமாதிரி உணரப்பிடிக்கிறதில்ல. தக்க நேரத்துல இல்லாமல் போன யாவுமே எப்போதைக்குமான அழியாத சோகம்தான். அந்தந்த நேரத்துக்கான தீரா துயரத்தை, அதீத கொண்டாட்டத்தை, வேற எப்பவுமே பூரணப்படுத்த ஏலாது. இதற்கிடையில எத்தனையோ மனுஷங்க நம்மை விட்டு நீங்கிப்போய்ட்றாங்க. நிம்மதி, ஆறுதல், பேச்சித் துணைக்கு ஆள், நாம சந்தோசமா இருக்குறப்ப கூடவே அதுல கலந்து மகிழ்விக்க ஒரு மனுசன், அழு